மிஹிந்தலையில் பயங்கரம் - கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி.!!

 

Tamil lk news


 மிஹிந்தலை - மஹாகிரிந்தேகம பகுதியில் ஒருவர் நேற்று காலை தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




கொலை செய்யப்பட்டவர் மிஹிந்தலை மஹாகிரிந்தேகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




நேற்று முன்தினம் இரவு குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே  வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.




அதன் பின்னர், மனைவி அவரை ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.




சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படும் 53 வயதான மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.




இந்தச் சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்