இன்று அதிகாலை 3 மணியளவில் புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
2.3 ரிக்டர் அளவில் மற்றொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று மொணகராகலை பல பகுதிகளில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனால் மக்கள் பீதி அடைய தேவையில்லை எந்த விதமான ஆபத்துக்கள் இல்லை என்பதால் அனைவரும் அமைதியாக இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு கேட்டுக்கொள்கிறார்கள்.
Tags:
srilanka



