வெளிநாடுகளில் வேலை செய்யப்படும் சில நபர்கள் நாட்டுக்கு டொவலர்களை அனுப்பாமல் பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு இன்று சிரமத்திற்கும் உள்ளாக்கப்பட்டதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் தான் இந்த நாட்டுக்கு டொவலர்களை அனுப்பக்கூடாது என பல பிரச்சாரங்களை செய்தன.
தற்போது நிலைமையில் ரூபாவின் பெருமதி மிகவும் வலுவடைந்து வருகிறது இந்த நிலையில் நாட்டுக்கு 400 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. அதேபோன்று சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி வருமானமும் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
ரூபாவின் பெருமதி வலுப்பெற ஆரம்பித்த நிலையில் வெளிநாடுகளில் பணியாற்றும் சிலர் மறைத்து வைத்திருந்த டொலர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
srilanka




