பேருவளை பிரதேசத்தில் இருந்து 24 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இன்று (மார்ச் 30) மதியம் 1.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்




