ஜனாதிபதி ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கோட்டே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

 

tamillk.com

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை தாக்கி தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட கோட்டே மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரை நேற்று (மார்ச் 28) கோட்டை நீதவான் திலின கமகே விளக்கமறியலில் வைத்தார். உத்தரவிட்டார்.


கோட்டே மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சந்திம நயனஜித் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்