04 வருடங்களுக்குள் இலங்கையில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு சுற்றுலா நகரமாக விளங்கும் நுவரெலியா மாவட்டத்தின் பங்களிப்பை அதிகரிக்க முறையான திட்டமொன்றின் ஊடாக செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். (10) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் நுவரெலியா புதிய நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் நுவரெலியா சுற்றுலாத் திட்டம் என்பனவும் வெளியிடப்பட்டன. இதில் நுவரெலியா அரசியல் அதிகாரம் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய மாவட்ட.தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என பலரும் நினைத்திருந்த போதிலும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்த அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு வருடமுழுதும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய கவர்ச்சிகரமான நகரமாக அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சுற்றுலா பயணிகளின் தேவைகளை உணர்ந்து திட்டங்களை தயாரிப்பதன் முக்கியத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். பாரிய கட்டிடங்களுக்குப் பதிலாக நிதானமாகச் செலவழிக்கக் கூடிய மிதமான சூழலுடன் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து, அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விசேட கவனம் செலுத்துமாறு பணித்தார்.
நுவரெலியா நகரில் முறைசாரா முறையில் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு பதிலாக முறையான திட்டமொன்றுக்கு இதனை நியூயோர்க் நகரமாக்குவதா அல்லது நுவரெலியாவாக பராமரிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



