பாடசாலைகளுக்கு அறிமுகமாகும் இன்னொரு மொழி!


srilanka news


இலங்கைக்கு ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காக கொண்டு பாடசாலைகளுக்கு ஆரம்ப கட்டத்தில் இருந்து ஜப்பானிய மொழியை பாடத்திட்டத்திற்குள் உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக இன்று (22.06.2023) இடம்பெற்ற பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.



மேலும் அவர் கூறுகையில் இந்த ஜப்பானிய மொழி திட்டத்திற்காக அமைச்சரவை ஊடாக இதற்கான விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

இவ்வாறான திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் கல்வி அமைச்சவுடன் இணைந்து சிறுவர்களுக்கான ஜப்பானிய மொழியை கற்பிப்பது தொடர்பான செயல் திட்டங்கள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



ஜப்பானிய சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட உள்ள ஜப்பானிய மொழி கற்பிக்கும் திட்டத்தில் 5000 ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர்களை கொண்ட குழு ஒன்றை ஆரம்பிக்கும்  வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என அமைச்சர் கூறினார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்