இன்று நள்ளிரவு முதல் பன்கள் உட்பட அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் பத்து ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நிர்வாக சபை கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
srilanka