பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தின் போது பலர் காணாமல் போயுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சம்பவம்
வடக்கு மாநிலமான பெரனாம்புகோவின் தலைநகரான ரெசிஃப்பின் புறநகரில் இருக்கும் ஜங்கா பாதியில் நேற்றைய முன்னைய தினம் (வெள்ளிக்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அடுக்குமாடியில் உள்ள மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் பெய்து கொண்டிருந்த கனமழையால் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
world-news