கொக்குத்தொடுவாய் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் -- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விசேட உரை

Mullaitivu - Kokkuthoduvai


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய கஜேந்திர பொன்னம்பலம் கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பில் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் அதேபோன்று மனித புதைகுழிகள் தோண்டப்படும் போதும் வெளிநாட்டு நிறுவனர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உறவினர்களாக இருக்கலாம் என மக்கள் அச்சம்

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழிகளிலிருந்து தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் தமது உறவினர்களாக இருக்கலாமோ என்ன தற்போது மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



மேலும் இந்த அகழ்வின்போது சர்வதேச விதிமுறைகளை சரியான முறைகளில் கடைபிடித்து வெளிநாட்டு நிபுணர்கள், தடவியலளர்கள் ஆகியோரின் உதவிகளையும் பெற வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.



முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழிகளின் விடயத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த காவல்துறையினர் தயக்கம் காட்டியுள்ளதாகவும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்