நேபாளத்தில் சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி




நேபாளத்தில் டெலிகாப்டர் ஒன்று இன்று விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு விபத்தான ஹெலிகாப்டரில் ஆறு பேர் பயணித்தார் இந்த நிலையில் ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளதாக வான் பயன நிறுவனமொன்று இது தொடர்பாக காலை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட டெலிகாப்டரில் மெக்ஸிகோவைச் சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள் பயணித்தார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு துண்டிப்பு

ஏவரெஸ்ட் பிராந்தியத்திலுள்ள லுக்லாவுக்கு அருகில் இருந்து தலைநகர் காத்மண்டுவை நோக்கி குறித்து ஹெலிகாப்டர் இன்று காலை 10.04 மணியளவில் புறப்பட்டது.

இந்த நிலையில் 10 நிமிடங்கள் பின்னர் அதனுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது என மானாங் எயார் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த டெலிகாப்டர் புறப்பட்டு சிறிது நேரத்தில் விழ்ந்துள்ளதாகவும் இதில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்துள்ளார் என நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்