தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை! tamillk news

 vavuniya news

தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை! tamillk news


தேசிய தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.


வவுனியா, கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் ​நேற்று (12) மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் வைத்து குறித்த தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.


இந்துக்களின் தீபாவளி தினத்தை முன்னிட்டு இத் தபால் முத்திரை இலங்கை தபால் திணைக்கள அத்தியட்சகர் றுவான் சரத்குமார அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் முத்திரையை இந்து காலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் பெற்றுக் கொண்டார்.


அதனைத் தொடர்ந்து அதிதிகளாக கலந்து கொண்ட கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக கு.திலீபன், வடமாகாண பிரதம செயலாளர் சமன்பந்துலசேன, மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோருக்கு தபால் முத்திரை வழங்கி வைக்கபட்டதுடன் மதகுருமாருக்கும் வங்கப்பட்டது.

தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை! tamillk news


குறித்த நிகழ்வில் இலங்கை தபால் திணைக்கள அத்தியட்சகரருடன் வடமாகாண தபால் திணைக்கள அத்தியட்சகர் மதுமதி வசந்தகுமாரி மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை! tamillk news


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்