காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்ம பொதி - Srilanka Tamil News

tamil News

Srilanka Tamil News

  

Tamil LK News

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி ஒன்றிலிருந்து கத்தி, புகையிலைகள் மற்றும் லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


காலி சிறைச்சாலையின் கூரை வழியாக நேற்று செவ்வாய்க்கிழமை (04) பொதி ஒன்று வீசப்பட்டுள்ளது.


இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பொதியைச் சோதனையிட்டுள்ளனர்.



இதன்போது, பொதியிலிருந்து கத்தி, புகையிலைகள் மற்றும் லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்டப்டுள்ளன.


இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காலி சிறைச்சாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்