இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் வானிலையில் மாற்றம்

  

Tamil lk News

இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

 

ஊவா, தென், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிதமான பலத்த மழை பெய்யும். 

 

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்