மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இணைய (online) சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் பணிகள் ஏனைய (0ffline) முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



