கொழும்பு தேர்ஸ்டன் பாடசாலை மாணவர்கள் வருடாந்த கல்வி சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு பயணித்துக் கொண்டிருந்தபோது நானுஒயா ரதஎல்ல வீதியில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில் 7 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களில் பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களை மிக விரைவாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை மிக விரைவாக வழங்கப்படுவதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவிரத்ன தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்திகள்



