மட்டக்களப்பு நோக்கி மாபெரும் பேரணியில்: வாக்குவாதத்தில் இளைஞர்கள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான மட்டக்களப்பு நோக்கிய பேரணியை பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குழப்புவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கருப்பு நாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் இந்த பேரணி இடம்பெற்று வருகிறது.

இந்த பேரணி இன்றைய தினம் (5) இரண்டாம் நாள் பேரணி, கிளிநொச்சி பரந்தன் சந்தியிலிருந்து வடக்கு கிழக்கு நோக்கி பரந்தன் வீதி வழியாக முல்லைத்தீவை நோக்கி செல்கிறது.

இதன் போது பேரணியில் இனம் தெரியாதவர்கள் சிவில் உடையில் பேரணியில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க முயற்சித்த போது பேரணியில் கலந்து கொண்ட இளைஞர்கள் இனம் தெரியாத நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பேரணியை முன்னோக்கி செல்லவிடாது இடைமறித்து பொலிஸாரும் குழப்பத்தை விளைவித்துள்ளனர்.

மட்டக்களப்பை நோக்கி பயணமாகும் பேரணியில் பல்கலைகழக மாணவர்களுடன், மதகுருமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்புகள் என பல தரப்பினரும் கலந்துகொடண்மை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்