அரசாங்கம் வருமானம் நிலைமை மிகவும் மோசமாக காணப்படுவதால் அரச சேவை பேணுவதற்கு அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதி பொருளாதார ஸ்திரப்பபடுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி திறைசேரி செயலாளருக்கு இந்த பனிப்புரையை விடுத்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தெரிவிக்கையில் முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு தடையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அமைச்சரவைக்கு அறிவித்தார்.
இதன்படி அரசாங்கத்தினால் வழங்கப்படும் அத்தியாவசிய சேவையான சம்பளம் வழங்குதல், கடன் சேவைகள், ஓய்வூதியம், வைத்தியசாலை மருத்துவ சேவைகள், மாதாந்த சமூர்த்தி மானியங்கள், முதியோர்களுக்கான நிதியுதவி வழங்குதல், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான வழங்க வரவு செலவு திட்டத்தில் முன்மொழிபட்ட நிதி உதவி எல்லாவற்றுக்கு மாத்திரம் நிதியை வழங்குமாறு ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க பணிபுரி விடுத்துள்ளார்.
இதேபோன்று தரம் 5 புலமைப்பரிசில் கொடுப்பனவு, மஹபொல உதவித்தொகை, திரிபோஷ, உழவர் ஓய்வூதியம், பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு திட்டம், ஊனமுற்ற இராணுவத்திற்கான கொடுப்பனவு, இராணுவ வீரர்களின் பெற்றோர் பராமரிப்பு கொடுப்பனவு, இதேபோன்று ஒதுக்கி வைக்க முடியாத மின்சாரம், சிறைச்சாலை, இராணுவத்திற்கு உணவு வழங்கல், பராமரிப்பு சேவைகள், கட்டட வாடகை, துப்புரவு சேவை, பாதுகாப்பு சேவைகளுக்கான ஒப்பந்த கொடுப்பனவு, ஊழியர் சேமலாப நிதி போன்ற சட்டபூர்வ கொடுப்பனவுகள் இதேபோன்று உர மானியம் வழங்கல் ஆகிய நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.



