ரஷிய உக்ரைன் நெருக்கடியை அடிப்படையாக கொண்டு, சர்வதேச புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவுடனோ அல்லது 'நேட்டோ' அல்லது 'வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்புடன்' ரஷ்யா ஒருபோதும் போரில் ஈடுபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், உலகின் உளவுத்துறை அமைப்புகள் ஒன்று கூடி, உலகின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிடுகின்றன. இந்த முறை, இந்த அறிக்கை ரஷ்ய-உக்ரைன் நெருக்கடி குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளது.
அமெரிக்கா அல்லது நேட்டோ படைகளுடன் ரஷ்யா ஒருபோதும் மோதலாக இருக்காது. அப்படி ஒரு மோதலை உருவாக்கினால் அது பெரும் பேரழிவை ஏற்படுத்தும். இது மூன்றாம் உலகப்போர் வரை தொடரும். என்பது அனைவருக்கும் தெரியும்' என உளவுத்துறை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
world news