பல்கலைக்கழக பட்டதாரி மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்

இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி 25 வயதுடைய ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக இளம் யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் மரணமான விசாரணை தொடர்பாக வெளியான தகவல்கள்.

இதன்படி பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி அவரது மரணம் கழுத்து நெரிக்கப்பட்டமையினால் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

சம்பவம்

பல்கலைக்கழக படிப்பை முடித்த சச்சினி,  இரத்தினபுரியில் ஹிடெல்லானா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்ற யுவதியின் பற்றி தகவல் ஏதும் கிடைக்காத பட்சத்தில் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் தகவல் அளித்ததை அடுத்து நடத்திய தேடுதலின் போது.

யுவதியின் சடலம் 25ஆம் திகதி அவரது வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவத்தில் விசாரணையின் போது யுவதியின் கைது தொலைபேசி காணவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையின் போது சடலம் தொடர்பில் வெளிப்படையான தீர்மானம் எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்