இலங்கை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் (சிங்கள-தமிழ்) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி பத்தரமுல்ல பொல்துவ வீதிச் சந்தியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் குழுவொன்று இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது அங்கு சென்ற நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் திரு.விஜயதாச ராஜபக்ஷ, மாணவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்தார்.
Tags:
srilanka