நேற்று (07) கண்டி பிரதான வீதியின் கணேதன்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்து மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்தனர். .
நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற லங்காம பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் 59 வயதுடைய உலதோலஹேன, பொத்தலாகம பகுதியைச் சேர்ந்த வசந்த அமரசிங்க அமரசிங்க பத்திரனகே என்ற நபரே என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தனது மகளுடன் நீர்கொழும்பில் இருந்து பேருந்தில் பேராதனை நோக்கி பயணித்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, காயமடைந்தவர்கள் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேகாலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒய். எல். லீலாவன்ச மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாவனல்லை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு.களுஆராச்சி தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.