வவுனியாவில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கான சட்டவைத்திய பரிசோதனை நேற்றைய தினம் (08.03.2023) இடம்பெற்றிருந்தது.
வவுனியா - குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் நால்வர் அடங்கிய குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பரிசோதனை முடிவில் உடலில் எதுவும் நஞ்சாருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் உயிரிழந்தவர்களின் இரத்தம், சிறுநீர் மாதிரிகள் அனைத்தையும் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மாதிரிகள் அனைத்தும் பரிசோதனை முடிவு வந்த பின்னரே மரணத்திற்கான காரணங்கள் தொடர்பாக தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியும் எனவும் சட்ட வைத்திய பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (42) அவரது மனைவி கௌசிகன் வரதராயினி(36) இரு பிள்ளைகளான கௌசிகன். மைத்ரா (9) கௌசிகன். கேசரி(3) ஆகியோரின் சடலங்கள் உறங்கியபடி மீட்கப்பட்டுள்ளது இதில் கௌசிகனின் சடலம் மாத்திரம் வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிய விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா பொலிஸார் மீட்கப்பட்ட நால்வரின் சடலங்களையும் சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மேலதிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.