நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் விசிட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு அமைய வீடுகள், பாடசாலைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் பரிசோதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு இராணுவம், பொலிஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதவகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களில் டெங்கு நோயால் 400க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது நாளாந்தம் 200 டெங்கு நோயாளர்கள் மட்டுமே பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளினி ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த ஆறு மாதங்களில் 51,768 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 32 மரணங்களும் பதிவாகி உள்ளன.
தற்போது டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதார வைத்திய அதிகாரியின் 48 பிரிவுகள் மிக ஆபத்துள்ள பிரிவுகளாகவும், அதிகக்கூடிய டெங்கு நோயாளர்கள் 25,835 பேர் மட்டும் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக வைத்தியர் நளினி ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



