நாட்டில் தற்போது உள்ள விலைவாசிகளில் முட்டை, கோழி இறைச்சிகளின் விலைகளும் குறையும் என கால்நடை மேம்பாட்டு துறை ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த விலை மாற்றம் ஆனது அடுத்த 2 மாதத்திற்குள் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07.07.2023) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருந்த போதும் அண்மை காலமாக டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையிலும் பல பொருட்களின் விலைகள் குறையவில்லை பழைய விலைகளிலே பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என மக்கள் குற்றம் சாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
srilanka