புத்தளத்தில் இருந்து நுவரலியா நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியா பேருந்து ஒன்று நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி பேருந்து குடைசாய்ந்துள்ளது.
சுற்றுலா பயணிகளை புத்தகத்திலிருந்து ஏற்றிக்கொண்டு நுவரிலியா பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து (10) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தின் போது பேருந்தில் பயணித்த 22 பேரில் 8 பேர் கடுமையான காயங்களுக்குளாளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் நித்திரையே விபத்தின் காரணம்
குறித்த விபத்து சம்பவமானது சாரதிக்கு சித்திரை காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்தில் காயம் அடைந்த 8 பேரில், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் நாலு பேர் புஸ்ஸலாவ வகுக்கப்பிட்டிய வைத்திய சாலையில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பி உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக புஸ்ஸலாவ பொலிஸார் மேலதிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.