யாழ்ப்பாணம் மாநகர சபை பகுதிக்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமைக்காக 20 பேரிறிக்கு நீதிமன்றத்தால் 540,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 11-ம், 12ம் திகதிகளிலும் மற்றும் ஜனவரி (2023) மாதம் 17ம்,18ம் திகதிகாலிலும் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட சுகாதார பரிசோதகர் பிரிவினர் பலசரக்கு வியாபார நிலையங்களை பரிசோதித்த போது காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், வண்டுகள் மேய்ந்த உணவு பொருட்கள் ஆகியவற்றை பரிசோதனர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு காலாவதியான உணவுப் பொருட்களை பொது சுகாதார பரிசோதகர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தால் 20 வர்த்தக நில உரிமையாளர்களுக்கு 540,000 ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டது.
Tags:
jaffna



