பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: வடக்கு மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர்

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறுகள் விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாணத்தின் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார்.


மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் மீள பணத்தை பெறுவதற்காக அடித்து துன்புறுத்திய கும்பல் தொடர்பாக வெளியான காணொளிகள் குறித்த விடயத்தை விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் மீற்றர் வட்டிக்கு வாங்கியவர்களிடம் பணத்தை மீள பெறுவதற்காக மருதனார்மடம் தோட்ட காணிக்குள் வைத்து அடித்துத் துன்புறுத்தும் கும்பலின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

இது தொடர்பான உண்மை சம்பவங்களை ஆராய்ந்து சட்டத்துக்கு புறம்பாக மக்களுக்கு துன்புறுத்தும் நபர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸ் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் போது இந்த சம்பவத்தில் தொடர்பான ஐந்து பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றப்பிரிவு பொலிஸ் பிரிவினர்களால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகள் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்களுக்கு முறைப்பாடுகள் செய்வதில் சிக்கல்கள் எதுவும் ஏற்பட்டால் நேரடியாக வந்து வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு தகவல்களை வழங்கினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்