பிறந்து 7 நாட்களான சிசுவை மூன்று தடவை தரையில் அடித்து கொடூரமாக கொலை செய்த 28 வயதான சந்தேகநபரான தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் கழுத்துறை, பயாகல பிரதேசத்தில் பிறந்த ஏழு நாட்கள் ஆன சிசுவை தரையில் அடித்து கொலை செய்தமைக்காக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களை அமைய நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 9ஆம் திகதி நாகொட போதனை வைத்தியசாலையில் பிறந்த இரட்டை குழந்தைகளின் இளைய மகளே இவ்வாறு சந்தேகநபரான தாயாரால் கொலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையின் போது பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவதற்காக பெற்றோர் இருவரும் கடந்த 15 ஆம் திகதி ஜோதிடர் ஒருவரை சந்தித்து வீடு திரும்பிய நிலையிலேயே இந்த கொலை இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
சிசு படுக்கையில் இருந்து எழுந்து விடாததை அடுத்து களுத்துறை போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் சிசு உயிரிழந்த நிலையிலே காணப்பட்டதுடன் பிரேத பரிசோதனையில் சிசு படுகொலை செய்யப்பட்டமை தெரிய வந்ததை அடுத்து சந்தேகநபரான தாயை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தாய் மூன்று தடவை சிசுவின் மூக்கை அழுத்தியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தம்பதியினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும் இவ்வளவு காலத்திற்கு பின்னர் இப்போதுதான் அவர்களுக்கு முதல்முறையாக குழந்தைகள் பிறந்துள்ளது என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு சந்தேகநபரான தாயாரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளர்.



