நாட்டில் தற்போதைய பொருளாதாரம் நெருக்கடி காரணமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பணிபுரியும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகள் பணியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பணியாற்ற வேண்டிய 56 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை விமான சேவைக்கு குறைந்தது 138 பேர் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படும் நிலையில் தற்போது 82 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மாத்திரமே சேவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு புதிதாக 25 பட்டாதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாவும் ஆனால் அவர்கள் இந்த சேவையில் நிபுணத்துவம் பெறுவதற்கு சுமார் பத்து வருடங்கள் ஆகும் எனவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
தற்போது இலங்கை விமான சேவையில் இருக்க வேண்டிய 250 விமானங்களில் 44 பேர் பணியை விட்டு வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக இலங்கை விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை நிலவுகளாகவும்.
விமானிர்களுக்கான சர்வதேச சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் இந்த சேவைகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.றண





