விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (13.02.2023) அவர் தஞ்சாவூரில் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவர் விரைவில் மக்கள் முன் தோன்றுவார்.
மேலும் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பதை தற்போது அறிவிக்க இயலாது. பிரபாகரனும் மனைவி மற்றும் மகளும் நலமாக உள்ளனர்.
பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது. அவருடன் தொடர்பில் தான் உள்ளோம். பிரபாகரன் அனுமதியின் பேரிலே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.
இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்து இருப்பதனால் இதனை தற்போது அறிவிக்கின்றோம்.
தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




