இன்று (16.02.2023) மாலை வவுனியாவில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் ஆணையக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய வவுனியாவில் இளைஞர்கள் மற்றும் யுவாதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.
தேர்தலுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்கி தேர்தலை நடத்த முடியும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சகத்தின் செலவு 400 அல்லது 500 மில்லியன் ரூபாய்களாகவும். அதற்கான முன்பணம் மாத்திரம் தேர்தலுக்கு முன்னால் செலுத்தப்படும். அவ்வாறே கடந்த காலங்களிலும் இடம்பெற்றது.
முப்பனமாக 150 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். தேர்தலுக்கு பத்து மில்லியன் அல்லது 8 மில்லியன் முழுமையாக செலவாகும் அவை அனைத்தையும் ஒரே தடவை கோரப்படாது.
இரண்டரை அல்லது 3 பில்லியன் தேர்தலுக்கு முன்பாக தேவைப்படும் அந்தத் தொகையை கட்டம் கட்டமாக செலுத்த முடியும். தேர்தலுக்கான நிதியில் நூற்றுக்கு 60 வீதம் தேர்தலுக்குப் பின்னரே தேவைப்படும். மூன்று பில்லியன் கிடைத்தால் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அவ்வாறு திட்டத்தினை செயல்படுத்த முடியாவிட்டால் சட்ட திட்டங்களுக்கு அமைய குறுகிய காலத்திற்கு தேர்தலை பிற்போட தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரிடும்.
அதேபோன்று தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் ஊடாக முப்பனமாக மேலதிகமாக பெற முடியும்.
மேலும் தேர்தல் செலவுகளை குறைப்பதற்கு அரச உத்தியோகத்தர்களை தேர்தல் கடமைகள் ஈடுபடும்போது அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை எடுத்துவருமாறு கோரப்படும்போது மேலும் செலவினத்தை மட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ஒன்று இணைந்து செயல்படும் போது இந்த தேர்தலை நடத்த முடியும் என தெரிவித்தார்.



