கொழும்பில் - மருதாணை எல்பிஸ்டன் மண்டபத்திற்கு முன்பாக அமைதி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை எதிர்த்து கருப்பு நாளாக பிரகடனப்படுத்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று (3) பிற்பகல் முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்பினர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் போராட்டத்தை தொடர்ந்து 24 மணி நேரம் சத்தியாக்கிரகத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என ஊடக செய்திகளில் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து இப்பகுதியில் அமைதியின்மை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



