14 வயது சிறுமியுடன் ஏற்பட்ட காதலை தொடர்ந்து, அவரை விகாரையில் நான்கு நாட்கள் தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது கம்பஹா - மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா - மீரிகம பிரதேசத்தில் 16 வயதான பிக்குவுக்கும் 14வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில்,சிறுமியை விகாரைக்கு அழைத்து சென்ற பிக்கு அங்கு அவரை 4 நாட்கள் தடுத்து வைத்துள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிக்குவை பொலிஸார் கைது செய்தனர்.
விளக்கமறியலில்
கைது செய்யப்பட்ட பிக்கு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை, ஜனவரி 4ஆம்திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல நீதிவான் உத்தரவிட்டார்.
செய்திகளை அறிந்து கொள்வதற்கு WhatsAppல் இணைந்து கொள்ளுங்கள்
Join Now
Tags:
srilanka



